தேவர் ஜெயந்தி விழாவில் 3 பேர் கொலை: பாதுகாப்பு பணியில் கவனக்குறைவு- 2 போலீசார் சஸ்பெண்டு



தேவர் ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜையின்போது பரமக்குடி அருகே 3 பேர் கொலை செய்யப்பட்டனர். முன்னதாக கொலை நடந்த பகுதி அருகே உள்ள ரெயில்வே கேட் பகுதியில் எமனேசுவரம் தலைமை காவலர் சேதுராமனுக்கு பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. இதே
போல் எமனேசுவரம் மற்றொரு தலைமை காவலர் சுலைமானுக்கு பொன்னையாபுரம் ரெயில்வே கேட்டில் பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. 2 பேரும் வேறு மாவட்ட போலீசாருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

ஆனால் அவர்கள் சரியாக வாகன தணிக்கையில் ஈடுபடாமலும், அஜாக்கிரதையாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனுக்கு அறிக்கை கொடுத்தனர். அதன்பேரில் பாதுகாப்பு பணியில் அஜாக்கிரதையாக இருந்த தலைமை காவலர்கள் சேதுராமன், சுலைமான் ஆகிய 2 பேரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

பரமக்குடி கொலை சம்பவத்தை கண்டித்து பந்த் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.