ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்ல நடிகர் கார்த்திக்கிற்கு போலீஸ் தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு சென்று திரும்பியவர்கள் மீது மதுரை சிந்தாமணி ரிங்ரோட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில் பலியான 6 பேரின் குடும்பத்தினரை சந்தித்த நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் ஆறுதல் கூறி நிதியுதவி அளித்தார். இச்சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 14 பேரை நேற்று பார்த்து நடிகர் கார்த்திக் ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதி வழங்கினார். பின்னர்
அவர் நிருபர்களிடம் கூறுகையில், பெட்ரோல் குண்டு தாக்குதல் வேதனையானது. இந்தியா மனிதநேய நாடு. நாமெல்லாம் ஈ, எறும்புக்குக் கூட தீங்கு செய்யாதவர்கள். இந்த பூமியில் இச்சம்பவம் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது என்றார். இதன்பிறகு தேவர் ஜெயந்தியின் போது ஏற்பட்ட கலவரத்தில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வேளாங்குளம் கிராமத்தில் பலியான சிவக்குமார் வீட்டிற்கு சென்று விசாரித்து விட்டு, அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் நினைவிடம் செல்ல
திட்டமிட்டிருந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. எனவே இப்பகுதிக்கு செல்வதை அனுமதிக்க முடியாது என்று மதுரை போலீசார் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வாங்கிய மாலையை மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அணிவித்தார். மலர்வளையத்தையும் அங்கேயே வைத்து விட்டு சென்றார். கட்சி நிர்வாகிகள் பாலமுருகன், பூபாலன், சாந்திபூஷன், காசிராஜன், துர்க்கை, கார்த்தி, ராதா உடன் சென்றனர்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில், பெட்ரோல் குண்டு தாக்குதல் வேதனையானது. இந்தியா மனிதநேய நாடு. நாமெல்லாம் ஈ, எறும்புக்குக் கூட தீங்கு செய்யாதவர்கள். இந்த பூமியில் இச்சம்பவம் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது என்றார். இதன்பிறகு தேவர் ஜெயந்தியின் போது ஏற்பட்ட கலவரத்தில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வேளாங்குளம் கிராமத்தில் பலியான சிவக்குமார் வீட்டிற்கு சென்று விசாரித்து விட்டு, அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் நினைவிடம் செல்ல
திட்டமிட்டிருந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. எனவே இப்பகுதிக்கு செல்வதை அனுமதிக்க முடியாது என்று மதுரை போலீசார் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வாங்கிய மாலையை மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அணிவித்தார். மலர்வளையத்தையும் அங்கேயே வைத்து விட்டு சென்றார். கட்சி நிர்வாகிகள் பாலமுருகன், பூபாலன், சாந்திபூஷன், காசிராஜன், துர்க்கை, கார்த்தி, ராதா உடன் சென்றனர்.
