வீரவணக்கம்....."

வீரமரணம் அடைந்த அகமுடையார் இனத்தை சேர்ந்த கணேசனுக்கு முக்குலத்து புலிகள் அமைப்பு சார்பாக வீரவணக்கம்....."

சிவகாசி தந்தை பெரியார் காலனியில் 40 வருடமாக முக்குலத்தோர்கள் 150 குடும்பத்தினர் வாழ்ந்துவருகின்றனர். இன்று அதிகாலை 6 மணி ஆளவில் 500 போலீஸ் , விருதுநகர் மாவட்ட S P , மதுரை S P , விருதுநகர் மாவட்ட துணை ஆட்சியாளர் , தலைமையில் இடிக்க முயன்ற போது தடுக்கும் விதமாக "அகமுடையார் இனத்தை சேர்ந்த கணேஷன் என்பவர் தீ குளித்து வீரமரணம்..."
இந்த போராட்டத்தில் முக்குலத்தோர் சார்பாக "வீரகுல அமரன் இயக்கம், பார்வாடு பிளாக்" மட்டும் கலந்து கொண்டது... முக்குலத்தோர் குடும்பத்தை கபத்த அணைத்து முக்குலத்தோர் அமைப்புகளும் கலந்து கொள்ளவேண்டும்..

சிவாகாசியில் காவல் துறையினரின் அடாவடித்தனத்தை கண்டித்து மாடிமீது ஏறிநின்று தீக்குளித்து இருந்த கணேசனை காவல்துறை, ஊடகங்கள் உள்பட அனைவருமே வேடிக்கை மட்டுமே பார்கிறார்கள். சன்நியூஸ்ல அவர் பெற்றோலை உடல் முழுவதும் ஊற்றி கொள்வதையும், உடல் எரிந்து கருகுவதையும் அப்படியே படம் பிடித்து இருக்கிறார்கள். :( என்ன ஒரு கேவலமான நிகழ்வு! ஒருவனின் சாவையும், ஒருவனின் அந்தரங்கத்தையும் படம் பிடிக்க மட்டும்தான் இந்த ஊடகங்கள் இருக்கிறதா? யாருமே அவரை காப்பாற்ற முயலவில்லை. 500 பேருக்கும் மேற்பட்ட காவல் துறையினரின் திமிர்த்தனம் ஜெ. கொடுக்கும் சலுகைகளால் தான் ஏறபட்டுள்ளது. அந்த 150 குடும்பத்தினரின் வீடுகளையும் தரைமட்டமாக்கி விட்டால், அவர்கள் எங்கே போய் வீடு கட்டி வாழ்வார்கள்? ஒரு வீடு கட்ட ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தினர் படும்பாடு யாருக்கு தெரிய போகிறது. நாற்பது வருடங்களுக்கு மேலாக குடியிருக்கும் அந்த மக்களிடம், ஒவ்வொரு தேர்தலின் போதும் எல்லா அரசியல்வாதியும் அவர்களின் காலில் விழுந்துதானே வோட்டு வாங்கி வெற்றி பெற்றீர்கள். இப்போதான் வானத்திலிருந்து குதித்து பூமிக்கு வந்தீர்களா? தமிழக அரசின் ஒவ்வொரு நகர்வும் வெகுசன மக்களுக்கு எதிராகவே இருக்கிறது.

# 150 குடியிருப்புகளில் வாழும் அனைத்து மக்களுக்காக தன்னுயிரை தீயிற்கு கொடுத்து, அரசாங்க அடாவாடி கும்பலை தற்காலிகமாக தடுத்து நிறுத்திய அகமுடையார் இனத்தை சார்ந்த 'சமூக போராளி' கணேசனுக்கு வீர வணக்கம்!