பசும்பொன் செல்லும் வாகனங்களுக்கான விதிமுறைகள் .

பசும்பொன் கிராமத்தில்
முத்துராமலிங்கத்தேவரின்
105வது தேவர்ஜெயந்தி மற்றும்
50வது குருபூஜை விழா வரும்
28ம் தேதி முதல் 30ம்
தேதி வரை நடக்கிறது.
விழாவில் பங்கேற்க
செல்பவர்கள் பயணிக்கும்
வாகனங்களின்
உரிமையாளர்கள் மற்றும்
வாகன ஓட்டுனர்கள்
நிபந்தனைகளை தவறாமல்
கடைப்பிடிக்க
வேண்டும்..பசும்பொன்
கிராமத்திற்கு தேவர்
ஜெயந்தி மற்றும்
குருபூஜை விழா
விற்கு செல்கிற வாகனங்கள்
முன்கூட்டியே அருகில் உள்ள
போலீஸ் ஸ்டேஷன்களில்
முறையாக
தெரிவித்து அனுமதி பெற்ற
பின்னரே செல்ல வேண்டும்.
வாகனங்களில் முன்
இடது பக்க கண்ணாடியில்
போலீஸ் துறையின்
அனுமதி பெற்ற
ஸ்டிக்கர்களை கட்டாயம்
ஒட்டியிருக்க வேண்டும்.
மாவட்ட எல்லையில் காவல்,
வருவாய் மற்றும்
போக்குவரத்துதுறையினர்
இணைந்து அமைக்கும்
சோதனை சாவடிகளில்
விழாவிற்கு செல்கிற
போதும், திரும்பி வருகிற
போதும் முறையான
விபரங்களை தெரிவிக்க
வேண்டும்.தேவர்ஜெயந்தி விழாவிற்கு செல்கிற
வாகனங்களில்
பதிவுச்சான்று,
காப்புச்சான்று,
அனுமதிச்சீட்டு,
வாரிசுச்சான்று,
புகைச்சான்று, ஓட்டுனர்
உரிமம் ஆகியவற்றின் அசல்
அல்லது ஜெராக்ஸ்
வைத்திருக்க வேண்டும்.
வேன்கள், டூரிஸ்ட் டாக்சிகள்
போன்ற மூடிய
அமைப்பு கொண்ட
வாகனங்களாக இருக்க
வேண்டும்.
விழாவிற்கு செல்கிற
வாகனங்களில் ஆயுதங்களையோ,
வெடிபொருட்களையோ,
மதுபானங்களையோ வைத்திருக்க
கூடாது. வாகனங்களில்
ஒலி பெருக்கிகள்
பொருத்தி இருக்க கூடாது.
வாகனங்களில் கருவிகள்
வைக்கும்
பெட்டி பூட்டப்பட்டு சாவி டிரைவர்
கைவசம் வைத்திருக்க
வேண்டும். வாகனங்களில்
அனுமதிக்கப்பட்ட
அளவிற்கு மட்டும் ஆட்கள்
ஏற்றிச் செல்லப்பட வேண்டும்.
வாகன ஓட்டுனர் செல்போன் எண்
மற்றும் வாகனத்தில் பயணம்
செய்பவர்கள் யார்
பொறுப்பில்
செல்கிறார்களோ அந்த
பொறுப்பாளர்கள் செல்போன் எண்
மற்றும் பயணம் செய்பவர்கள்
விபரப்பட்டியல் அந்தந்த
போலீஸ் ஸ்டேஷன்களில்
கொடுப்பதுடன் ஒரு பட்டியல்
நகல் டிரைவரும்
வைத்திருக்க வேண்டும்.