கமுதி: கமுதி அருகே பசும்பொன்னில் நேற்று காலை லட்சார்ச்சனையுடன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் விழா நடைபெறுகிறது. கிராம பகுதிகளில் பதற்றம் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.முத்துராமலிங்கத்தேவரின ் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா ஆண்டு தோறும் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அவரது சொந்த ஊரான பசும்பொன்னில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழா நேற்று காலை மங்கள இசையுடன் தொடங்கியது.தேவர் நினைவில்லத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் லட்சார்ச்சனை பூஜை துவங்கி நடைபெற்றது.
வேத விற்பன்னர்கள் ஒன்று கூடி வேத மந்திரங்களை பாராயனம் செய்தனர். ஓதுவார்களும் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பாடல்களை இசையுடன் பாடினர்.ஆண்டு தோறும் 3 நாள் நடைபெறும் தேவர் திருவிழா முதல் நாள் ஆன்மிக விழா, 2ம் நாள் அரசியல் விழா, 3ம் நாள் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடக்கிறது.
முதல் நாளான நேற்று ஆன்மிக விழா நடந்தது. இதையொட்டி தேவர் திருமண கலையரங்கில், தேவர் நினைவாலய நிர்வாகம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை
வேத விற்பன்னர்கள் ஒன்று கூடி வேத மந்திரங்களை பாராயனம் செய்தனர். ஓதுவார்களும் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பாடல்களை இசையுடன் பாடினர்.ஆண்டு தோறும் 3 நாள் நடைபெறும் தேவர் திருவிழா முதல் நாள் ஆன்மிக விழா, 2ம் நாள் அரசியல் விழா, 3ம் நாள் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடக்கிறது.
முதல் நாளான நேற்று ஆன்மிக விழா நடந்தது. இதையொட்டி தேவர் திருமண கலையரங்கில், தேவர் நினைவாலய நிர்வாகம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை
சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.பெண்கள் முளைப்பாரி ஏந்தி வந்தனர். பல கிராமங்களில் இருந்து பால் குடம் எடுத்து வந்து நினைவாலயத்தில் உள்ள தேவர் சிலைக்கு அபிஷேகம் செய்தனர். பலர் முடி காணிக்கை செலுத்தினர். இந்த ஆண்டு புதிதாக தியான அரங்கம் திறக்கப்பட்டு உள்ளது. மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் ஐம்பொன்னாலான தேவர் சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏற்றப்பட்டு, பசும்பொன் கிராமத்தை சுற்றி வந்தது. இரவு 10 மணிக்கு மேல் நடைபெறும் ஆன்மிக சொற்பொரூ.வுகளில் பலர் பேசினர்.இதனிடையே, மருதுபாண்டியர் குருபூஜைக்கு வந்தவர்கள் கத்தியால் குத்தியதில் எஸ்ஐ ஒருவர் உயிரிழந்த சம்பவமும், பசும்பொன்னுக்கு ஜோதியேந்தி வந்த வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவமும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.தேவர் ஜெயந்தியை முன்னிட்டு 8 ஆயிரம் போலீசார் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிராமங்களில் அடுத்தடுத்து மோதல் சம்பவங்களும், பதற்றமும் ஏற்படுவதால், போலீசாரின் கண்காணிப்பு அப்பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.